இந்தியா

பெங்களூரில் கனமழை: 2 பேர் பலி

DIN

பெங்களூர்: பெங்களூரில் பெய்த கனமழையால் நகரின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. புதன்கிழமை காலை 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. காவிரி மாநிலத்தில் இன்று காலை சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

உப்கார் லேஅவுட் பேருந்து நிலையம் அருகே உள்ள உபாநகரில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழையை பெய்தது. பேருந்து நிலையத்தில் 3 பேர் உள்ளே சென்ற நிலையில், ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். கனமழையில் 2 பேர் சிக்கி உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் பீகாரைச் சேர்ந்த தேவ்பிரத் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அங்கித் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருப்பினும் மற்றொரு தொழிலாளி திரிலோக் உயிர் பிழைத்துள்ளார்.

கனமழை இன்னும் 3 நாள்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இன்று கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தென்மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT