நேபாளத்தை தொடர்ந்து உத்தரகண்டிலும் நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்!
நேபாளத்தை தொடர்ந்து உத்தரகண்ட் மாநிலத்திலும் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நேபாளத்தை தொடர்ந்து உத்தரகண்ட் மாநிலத்திலும் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் நேபாளத்தில் மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமானது இந்தியாவின் தில்லி, நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது.
இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் இன்று காலை 6.27 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: தில்லியில் உணரப்பட்ட அதிர்வு!
இமய மலை பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.