முகப்பு
இந்தியா

பிகாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை: ஏன்?

பிகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 10 நவம்பர், 2022 at 11:59 AM
கோப்புப் படம்
பகிர்:


பிகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நவாடாவில், மொஹல்லாவில் வசித்துவந்த குடும்பம் பெரும் கடனின் இருந்ததாகவும், இதனால் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக காவல்துறை கண்காணிப்பாளர் கௌரவ் மங்லா தெரிவித்துள்ளார். 

இறந்தவர்கள் கேதர் லால் குப்தா (55), குடியா குமார் (45), சாக்ஷி குமார் (18), பிரின்ஸ் குமார் (17) மற்றும் ஷப்னம் குமாரி (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

Advertisement

சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும்.

இந்த விவகாரம் உரிய அதிகாரியால் விசாரிக்கப்பட்டு வருகிறது. 

கேதார் லால் குப்தா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் புதன்கிழமை அன்று விஷம் கொடுத்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் கோயிலுக்கு அருகில் மயங்கிய நிலையில் காணப்பட்டனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே அனைவரும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், அங்கு சிகிச்சையின் போது ஐந்து பேர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.