இந்தியா

பிகாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை: ஏன்?

DIN


பிகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நவாடாவில், மொஹல்லாவில் வசித்துவந்த குடும்பம் பெரும் கடனின் இருந்ததாகவும், இதனால் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக காவல்துறை கண்காணிப்பாளர் கௌரவ் மங்லா தெரிவித்துள்ளார். 

இறந்தவர்கள் கேதர் லால் குப்தா (55), குடியா குமார் (45), சாக்ஷி குமார் (18), பிரின்ஸ் குமார் (17) மற்றும் ஷப்னம் குமாரி (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும்.

இந்த விவகாரம் உரிய அதிகாரியால் விசாரிக்கப்பட்டு வருகிறது. 

கேதார் லால் குப்தா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் புதன்கிழமை அன்று விஷம் கொடுத்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் கோயிலுக்கு அருகில் மயங்கிய நிலையில் காணப்பட்டனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே அனைவரும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், அங்கு சிகிச்சையின் போது ஐந்து பேர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT