முகப்பு
பெண்ணைக் கொன்று உடல் பாகங்கள் தில்லி முழுவதும் வீசிய இளைஞர்: காட்டிக் கொடுத்த தடயம்
இந்தியா

பெண்ணைக் கொன்று உடல் பாகங்களை தில்லி முழுவதும் வீசிய இளைஞர்: காட்டிக் கொடுத்த தடயம்

காதலித்து, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்துவந்த காதலியைக் கொன்று 35 துண்டுகளாக வெட்டி, தில்லி நகர் முழுவதும் வீசிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தியா

பெண்ணைக் கொன்று உடல் பாகங்களை தில்லி முழுவதும் வீசிய இளைஞர்: காட்டிக் கொடுத்த தடயம்

காதலித்து, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்துவந்த காதலியைக் கொன்று 35 துண்டுகளாக வெட்டி, தில்லி நகர் முழுவதும் வீசிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:50 AM
பெண்ணைக் கொன்று உடல் பாகங்கள் தில்லி முழுவதும் வீசிய இளைஞர்: காட்டிக் கொடுத்த தடயம்
பகிர்:


புது தில்லி : காதலித்து, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்துவந்த காதலியைக் கொன்று 35 துண்டுகளாக வெட்டி, தில்லி நகர் முழுவதும் வீசிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வீட்டிலிருந்து சுமார் 18 நாள்களாக, சிறிது சிறுதாக உடல் பாகங்களை எடுத்துச் சென்று தில்லியின் பல்வேறு பாகங்களிலும் வீசியதாகக் குற்றவாளி ஒப்புக் கொண்டுள்ளார்.

குற்றவாளி அஃப்தாப் அமீன் பூனாவாலா (28), மும்பையைச் சேர்ந்த 26 வயது பெண் ஷ்ரத்தாவுடன் தில்லியில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

தனது பெண் காணாமல் போனதாக, தில்லி காவல்நிலையத்தில் பெண்ணின் தந்தை நவம்பர் 8ஆம் தேதி புகாரளித்தபோதுதான், இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது குறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது, குற்றவாளியும், கொலை செய்யப்பட்ட பெண்ணும் மும்பையில் ஒரே இடத்தில் பணியாற்றியிருக்கிறார்கள். பிறகு இருவரும் காதலித்துள்ளனர். இதனை பெண்ணின் குடும்பத்தினர் ஏற்காததால், ஆறு மாதங்களுக்கு முன்பு, ஷரத்தா வீட்டை விட்டு வெளியேறி தில்லியின் சத்தர்பூர் பகுதியில், அமீனுடன் வசித்து வந்துள்ளார்.

பலியான பெண்ணின் தந்தை, தனது மகளின் முகநூல் வழியாகத்தான், அவர் எப்படியிருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது குறித்து அறிந்து வந்துள்ளார். ஆனால் சில நாள்களாக அவர் முகநூல் பக்கத்துக்கு வராமல் இருந்தது தந்தைக்கு கவலையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் தில்லி வந்து, தனது மகன் வசித்து வந்த குடியிருப்பில் விசாரித்த போது, அங்கு யாருமே இல்லை என்று தெரிய வந்தது.

இதையடுத்து, தனது மகள் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காணாமல் போன பெண்ணை காவல்துறையினர் தேடியுள்ளனர்.

பெண்ணுடன் வாழ்ந்து வந்த அமீனை கைது செய்து விசாரித்ததில், ஷரத்தா, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அமீனை வற்புறுத்தி வந்தாகவும், மே மாதம் 18ஆம் தேதி இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஷரத்தாவை அமீன் கொலை செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

ஷரத்தாவைக் கொன்றுவிட்டு, வீட்டுக்கு ஒரு குளிர்பதனப் பெட்டி வாங்கி வந்து, அதில், அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி பதப்படுத்தி வைத்துள்ளார். பிறகு தினமும் ஒவ்வொரு பாகமாக எடுத்துச் சென்று வனப்பகுதி உள்ளிட்ட தில்லியின் பல்வேறு இடங்களிலும் வீசியுள்ளார். ஷரத்தாவின் உடல் பாகங்களை சுமார் 18 நாள்கள் சிறிது சிறிதாக எடுத்துச் சென்று வீசியதாக அமீன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
 

முழு கட்டுரையைப் படிக்க →