ஆமதாபாத்: டிசம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், குஜராத் மாநிலத்தில் இன்று நடைபெறும் இரண்டு காங்கிரஸ் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி உரையாற்றவிருக்கிறார்.
இதையும் படிக்க.. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? அவசியமா?
கடந்த இரண்டரை மாதங்களில், குஜராத் மாநிலத்துக்கு ராகுல் மேற்கொள்ளும் இரண்டாவது பயணமாக இது அமைந்துள்ளது. டிசம்பர் மாதம் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ராகுல் குஜராத் செல்கிறார்.
பாஜக ஆளும் குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தின் மஹுவா மற்றும் ராஜ்கோட் நகரங்களில் இன்று பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்கிறார்.
இதையும் படிக்க.. 'நான் அழகாக இருக்கிறேனா' என்று கேட்டால் அம்மா இப்படி சொல்வார்? ராகுல் பகிர்ந்த ருசிகரம்
கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கி, ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கேரளம், தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் என இந்த மக்களை ஒன்றிணைக்கும் வகையில் ராகுல் காந்தியின் நடைப்பயணம் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த நடைப்பயணம் மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை மத்தியப் பிரதேசத்தை அடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.