இந்தியா

ராகுல் காந்தி நடைப்பயணத்தில் இணைந்த பிரியங்கா காந்தி!

DIN

மத்தியப் பிரதேசத்திற்குள் நுழைந்துள்ள ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இணைந்துள்ளார்.

தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம் என பல்வேறு மாநிலங்களைக் கடந்திருக்கும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மத்திய பிரதேசத்திற்குள் நேற்று நுழைந்தது.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணம் இன்று 78வது நாளாக மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், இன்றைய நடைப்பயணத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் மகன் ரைஹன் வதேரா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளார். மேலும், ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட்டும் பங்கேற்றார்.

மேலும், ம.பி.யில் அடுத்த 10 நாள்கள் 7 மாவட்டங்களில் நடைப்பயணம் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT