நிர்மலா சீதாராமனை சந்தித்தார் பழனிவேல் தியாகராஜன் 
இந்தியா

நிர்மலா சீதாராமனை சந்தித்தார் பழனிவேல் தியாகராஜன்

புது தில்லி சென்றுள்ள தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்று காலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார்.

DIN

புது தில்லி: புது தில்லி சென்றுள்ள தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்று காலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார்.

தமிழகத்துக்குத் தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விரைவில் வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரானை நேரில் சந்தித்து பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மதுரையில் நடைபெறவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தை செயல்படுத்துவதற்கான கடன் குறித்தும் நிர்மலா சீதாராமனிடம், பழனிவேல் தியாகராஜன் தகவல்களை கேட்டறிந்துள்ளார்.

இந்தியாவில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 3 மாதத்துக்கு ஒரு முறை நடத்தப்படும். அந்த வகையில் அடுத்தக் கூட்டம் மதுரையில் உறுதியாக நடைபெறும் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

SCROLL FOR NEXT