உத்திர பிரதேச மாநிலம் பதோஹியில் நேற்று (அக்.2) நடந்த துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாகினர் மற்றும் 50-க்கும் மேற்ப்பட்டோர் பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை(அக்.3) மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் துர்கா பூஜை பந்தல் தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்ததுள்ளது.
இந்த தீ விபத்தில் 12 வயது சிறுவன், 10 வயது சிறுவன் மற்றும் 45 வயது பெண் ஆகியோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், 22-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி, வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: முலாயம் சிங் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் பிரதமர்
தீ விபத்துக்கு குறைந்த மின்னழத்தம் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.