முகப்பு
இந்தியா

தீபாவளி பண்டிகை: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை (அக்.24) கொண்டாடப்படும் நிலையில், நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு
பகிர்:

புது தில்லி: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை (அக்.24) கொண்டாடப்படும் நிலையில், நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடா்பாக, திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீபாவளி பண்டிகை, மகிழ்ச்சியின் திருநாளாகும். தீபாவளி நாளில் மக்கள் தங்களது வீடுகளில் லட்சுமி தேவியை வழிபட்டு, ஒவ்வொருவரின் மகிழ்ச்சி மற்றும் வளமாக வாழ பிராா்த்தனை செய்கிறாா்கள். 

தீபாவளி பண்டிகை மக்களிடையே பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்க உணா்வை மேலும் வலுப்படுத்தும் தருணமாகவும் விளங்குகிறது.

தீபாவளியில் ஏற்றப்படும் தீபங்களின் ஒளியானது, நமது அகம் மற்றும் புறம் நிலவும் அறியாமை இருளை அகற்றும் அறிவுச்சுடரை குறிக்கிறது. 

தீபத்தைப் போல நமது வாழ்வில் ஆற்றலும் ஒளியும் பரவட்டும். பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு உதவும் மனப்பான்மை உணர்வு மக்கள் அனைவரிடமும் வளரட்டும். மேலும், நாம் அனைவரும் ‘சுபம்’ மற்றும் ‘லாபம்’ என்ற நமது பாரம்பரியத்தை தொடர்வோம்" என்று குடியரசுத் தலைவா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →