முகப்பு
இந்தியா

தலைநகரில் மோசமடைந்தது காற்றின் தரம்

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், பலர் பட்டாசு வெடித்ததால், காற்றின் மாசுபாடு அதிகரித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:39 AM
கோப்புப் படம்
பகிர்:


தலைநகர் தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. 

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், பலர் பட்டாசு வெடித்ததால், காற்றின் மாசுபாடு அதிகரித்துள்ளது. 

தில்லி காற்றின் தரம் மிக மோசம் என்ற நிலைக்கு சென்றதால் முக்கிய இடங்களில் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. 

பட்டாசுகள் வெடிப்பதாலும், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், உள்ளிட்ட மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதாலும் தில்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் காற்று மாசு அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.