இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் கைதான பாகிஸ்தான் பயங்கரவாதி மாரடைப்பால் மரணம்

இந்தியாவைத் தாக்க பாகிஸ்தானால் பணம் பெற்று கைது செய்யப்பட்ட பயங்கரவாதி சுப்ரன் உசேன், ரஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் உயிரிழந்தார். 

DIN

பாகிஸ்தானால் பணம் பெற்று இந்தியாவில் தாக்குதல் நடத்த வந்த பயங்கரவாதி சுப்ரன் உசேன் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு, ரஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் உயிரிழந்தார். 

கடந்த இரண்டு வாரங்களுக்கு ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் நுழைய முயன்ற போது பாகிஸ்தானை சேர்ந்த சுப்ரன் உசேனை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். 

சுப்ரக் உசேன் அங்கு இயங்கி வரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவன் இந்தியாவில் நாசவேலைக்கு திட்டமிட்டு இருந்தான். இதற்காக தீவிரவாத அமைப்பினர் அவனுக்கு பண உதவியும் செய்ததாக கூறப்படுகிறது. 

சுப்ரன் உசேனிடம் விசாரணை நடத்தியதில் அவன் தனது கூட்டாளிகளுடன் இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த திடுக்கிடும் தகவல் வெளியானது. 

இந்நிலையில்,சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சனிக்கிழமை (செப்டம்பர் 3) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் உயிரிழந்தார். 

கடந்த மாதம் ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷேரா செக்டார் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக்குள் ஊடுருவ முயன்ற போது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் சுப்ரக் உசேன் காயமடைந்தான். 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சப்ஸ்கோட் கிராமத்தில் வசிக்கும் உசேன், இந்திய ராணுவச் சாவடி மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதை ஒப்புக்கொண்டார்.

2016 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்தால் அவரது சகோதரர் ஹாரூன் அலியுடன் உசேன் கைது செய்யப்பட்டார், மேலும், மனிதாபிமான அடிப்படையில் 2017 நவம்பரில் அவர் திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலக கோப்பை: அரையிறுதிச் சுற்று வாய்ப்பைத் தக்க வைத்த இந்தியா! அபார வெற்றி!!

அரசு விழாவில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு!

குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை!

கரூா் ஒன்றியத்தில் ரூ. 6.43 கோடியில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகள்! வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!

‘தி கேரளா ஸ்டோரி 2’ வெளியிட இடைக்கால தடை தொடருகிறது! - கேரள உயர்நீதிமன்றம்

SCROLL FOR NEXT