பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது.
தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில், பல முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.
தீபாவளி போனஸ், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவை குறித்து முடிவெடுக்கப்படலாம் என்றும் நாட்டின் பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.