இந்தியா

‘மோடி..மோடி..’ முழக்கங்களுடன் கேஜரிவாலுக்கு வரவேற்பு

DIN

குஜராத்திற்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வந்தபோது, பாஜக ஆதரவாளர்கள் மோடி மோடி என்று முழக்கமிட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தாண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்த்து ஆம் ஆத்மி, காங்கிரஸ் நேரடியாக போட்டியிடவுள்ளது.

தில்லியை தொடர்ந்து பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி, பிற மாநிலங்களிலும் கால் பதிக்கும் முனைப்பில் குஜராத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குஜராத்தில் பல கட்டங்களாக பிரசாரத்தை மேற்கொண்டுள்ள கேஜரிவால், வதோதராவில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று வதோதரா விமான நிலையம் வந்தார்.

அப்போது அங்கிருந்த பாஜக தொண்டர்கள் மோடி மோடி என முழக்கமிட்டதை தொடர்ந்து, ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் கேஜரிவால் கேஜரிவால் என பதிலுக்கு முழக்கமிட்டதால், விமான நிலையத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

தொடர்ந்து, சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்த கேஜரிவால், செய்தியாளர்களின் கேள்விக்கு செய்தியாளர்கள் சந்திப்பின்போது பதிலளிப்பதாக கூறி புறப்பட்டு சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT