மணிப்பூர் மாநிலம் மொய்ராங் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,
இந்த நிலநடுக்கம் காலை 10.02 மணிக்கு, ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவாகியுள்ளன.
மொய்ராங்கிற்கு தென்கிழக்கில் 100 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.