இந்தியா

சோனியா காந்தி இல்லத்தில் குவியும் காங்கிரஸ் தலைவர்கள்!

DIN

தில்லியிலுள்ள சோனியா காந்தி இல்லத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வருகை புரிந்துள்ளார். 

ஏற்கெனவே அஜய் மேகன், மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால், கமல்நாத் உள்ளிட்ட பலர் சோனியா காந்தி இல்லத்தில் குவிந்துள்ளனர். 

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிடுவது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், ராஜஸ்தான் முதல்வர் பதவியிலிருந்து அவர் விலகுவார் எனக் கூறப்படுகிறது. இதனால் துணை முதல்வரான சச்சின் பைலட் முதல்வர் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கு அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சச்சின் பைலட் முதல்வரானால் தங்கள் பதவியை ராஜிநாமா செய்வோம் என ராஜஸ்தானின் 92 எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், தலைமைப் பொறுப்பு மற்றும் ராஜஸ்தான் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தில்லியிலுள்ள சோனியா காந்தி இல்லத்தில் குவிந்துள்ளனர்.     

அந்தவகையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் சோனியா காந்தி இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT