முகப்பு
இந்தியா

கேரளம்: புதிதாக 29,491 பேருக்கு கரோனா

கேரளத்தில் புதிதாக 29,491 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:21 AM
பகிர்:


கேரளத்தில் புதிதாக 29,491 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இன்று வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29,491 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் 46,393  பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 28 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை  59,939 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 2,83,676 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →