சிம்லாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நான்கு நாள் பயணமாக சிம்லாவுக்கு வந்தடைந்தார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நான்கு நாள் பயணமாக சிம்லாவுக்கு வந்தடைந்தார்.
பராப்ராவில் உள்ள கல்யாணி ஹெலிபேடில் வந்திறங்கிய குடியரசுத் தலைவர் முர்முவை ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லா, முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, சட்டமன்ற சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா, கல்வி அமைச்சர் ரோஹித் தாக்கூர் உள்ளிட்ட பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தேசிய தணிக்கை பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்களுடன் உரையாட உள்ளார். மேலும் நாளை ஹிமாச்சல் பல்கலைக்கழகத்தில் 26வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக கலந்துகொள்கிறார்.
Advertisement
ஏப்.20ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. மேலும் இந்திய மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தையும் அவர் பார்வையிடுகிறார்.
குடியரசுத் தலைவர் முர்முவின் வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.