இந்தியா

ஹிமாசல் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் கட்டடங்கள்! விடியோ

ஹிமசால பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு அடுக்குமாடி கட்டடங்கள் சரிந்து விழுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

DIN

சிம்லா: ஹிமசால பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு அடுக்குமாடி கட்டடங்கள் சரிந்து விழுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சிம்லா, மண்டி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், சிம்லா, மண்டி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டடங்கள் சரிந்து விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லும் காட்சி மக்களை கலக்கமடைய வைத்துள்ளது.

தேசிய பேரிடா் மீட்புப் படையினா் (என்டிஆா்எஃப்), மாநில பேரிடா் மீட்புப் படையினா் (எஸ்டிஆா்எஃப்), ராணுவ வீரா்கள் உள்ளிட்டோா் நிலச்சரிவினால் காணாமல் போனவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மாநிலத்தில் பருவமழை தொடங்கிய கடந்த ஜூன் 24 முதல் ஆக.14 வரை மொத்தம் ரூ.7,171 கோடி மதிப்பில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. சுமாா் 9,600-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமலையில் 84,575 பக்தா்கள் தரிசனம்

வெளிமாநிலத்தவருக்கு தமிழகத்தில் வாக்காளா் அட்டை வழங்கக்கூடாது

நெடுஞ்சாலைத் துறையில் 10,000 காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவா்களின் பெற்றோருக்கு ரூ.25,000 அபராதம்!

சம்பட்டிமடை கிராமத்துக்கு சாலை அமைக்காததைக் கண்டித்து போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு

SCROLL FOR NEXT