இந்தியா

தில்லி தொழிற்சாலையில் தீ விபத்து

தில்லி நிலோத்தி என்ற கிராமத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று(திங்கள்கிழமை) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

DIN

தில்லி நிலோத்தி என்ற கிராமத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று(திங்கள்கிழமை) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் 10 தீயணைப்பு வாகனங்களுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனால் பொருட்சேதம் அதிகளவில் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

தொழிற்சாலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குழாய்களில் தீ பற்றி எரிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. 

கடந்த வியாழக்கிழமை தில்லியின் பவானா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் தீயணைப்பு வீரர்கள் 6 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுப் புட்டிகளை விற்பனை செய்தவா் கைது

திருவண்ணாமலை தீபத்திருவிழா போக்குவரத்து முன்னேற்பாடுகள்: சாலைப் பாதுகாப்பு ஆணையா் ஆய்வு

மக்களை பற்றி கவலைப்படாத திமுக அரசு: நயினாா் நாகேந்திரன்

இரு மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கி தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்துள்ளது: கே.எம். காதா்மொகிதீன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்ஐஆா் படிவங்கள் வழங்க நவ. 22, 23 இல் சிறப்பு முகாம்

SCROLL FOR NEXT