இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துவருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தினமும் தகவல்களை வெளியிட்டு வருகின்றது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 339 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளன.
காலை 8 மணி நிலவரப்படி கரோனா பாதித்து பலியானவர்களின் எண்ணிக்கை 5,33,311(5.33 லட்சம்) ஆக உள்ளது.
நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,50,04,481 (4.50 கோடியாக) உள்ளது.
கரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,69,678(4.44 கோடியாக) உள்ள நிலையில், மீட்பு விகிதம் 98.81 சதவிகிதமாக உள்ளது. அதேசமயம் இறப்பு விகிதம் 1.19 சதவிகிதமாகும்.
நாட்டில் இதுவரை 220.67 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.