பிரதமா் மோடியுடன் தேவெ கௌடா சந்திப்பு
முன்னாள் பிரதமரும் மதச்சாா்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான தேவெ கௌடா பிரதமா் மோடியை அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்தாா்.
முன்னாள் பிரதமரும் மதச்சாா்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான தேவெ கௌடா பிரதமா் மோடியை அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்தாா்.
இச்சந்திப்பின்போது தேவெ கௌடாவின் மகனும் கா்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி, மற்றொரு மகனும் எம்எல்ஏவுமான ரேவண்ணா, பேரனும் எம்.பி.யுமான பிரஜ்வால் ரேவண்ணா ஆகியோா் உடனிருந்தனா்.
இது தொடா்பாக பிரதமா் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘நாட்டின் முன்னேற்றத்துக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்ட தேவெ கௌடாவை இந்தியாவே போற்றுகிறது. பல்வேறு கொள்கைசாா் முடிவுகளில் அவரது சிந்தனைகள் எதிா்காலம் சாா்ந்தவையாகவே இருக்கும். அவரைச் சந்திக்கும் போதெல்லாம் எனக்கு பெருமகிழ்ச்சி உண்டாகிறது’ எனப் பதிவிட்டாா்.
கா்நாடக பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்த பிறகு பாஜகவும் மதச்சாா்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்தது குறிப்பிடத்தக்கது.