கேஜரிவால் இல்லம் முன்பு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம்: காரணம் என்ன தெரியுமா?
தில்லியில் அரசு நிதி பெற்று இயங்கி வரும் 12 கல்லூரிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் வீட்டுக்கு முன்பு பாஜக உறுப்பினர்கள் போராட்டம்.
தில்லியில் அரசு நிதி பெற்று இயங்கி வரும் 12 கல்லூரிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் வீட்டுக்கு முன்பு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க: நெல்லை தங்கராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
பல ஆண்டுகளாக இந்த 12 கல்லூரிகளின் ஆசிரியர்களும், பணியாளர்களும் ஊதியம் வழங்கக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். தில்லியின் தீனதயாள் உபாத்யாயா கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகள் வழங்கப்படாத ஊதியத்தினை வழங்கக் கோரி கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கல்லூரி தில்லி அரசிடம் இருந்து முழுவதுமாக தங்களது நிதியினைப் பெறுகின்றது.
Advertisement
Advertisement
இது குறித்து தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ராம்வீர் சிங் பிதூரி கூறியதாவது: கேஜரிவால் தலைமையிலான அரசு ஆசிரியர்களை வெளிநாடுகளுக்கு பயிற்சிக்கு அனுப்புவது தொடர்பாக ஆளுநரிடம் சண்டையிடுகிறது. ஆனால், இந்த 12 கல்லூரிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மீது தில்லி அரசுக்கு கவலை இல்லை என்றார்.
இதையும் படிக்க: துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ வெளியீடு குறித்து அறிவிப்பு
இந்த நிலையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அரவிந்த் கேஜரிவால் இல்லத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.