முகப்பு
இந்தியா

தில்லியில் கடும் பனிமூட்டம்: ரயில்கள் தாமதம்

தில்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, ரயில்கள் தாமதம் இயக்கப்படுகின்றன என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 4 ஜனவரி, 2023 at 12:58 PM
கோப்புப்படம்
பகிர்:

தில்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, ரயில்கள் தாமதம் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பனிமூட்டம் காரணமாக தில்லிக்கு செல்லும் 21 ரயில்கள் சில மணி நேரம் தாமதமாக வந்ததாக ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தில்லியில் நிலவும் கடும் பனி மற்றும் மோசமான வானிலை காரணமாக திங்கள்கிழமை இரவு 5 விமானங்கள் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டதாக சர்வதேச விமான நிலைய அதிகாரி தெரிவித்தார்.

அதிவிரைவு ரயில், பிரிமியம் ரயில்களும் தாமதமாக இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

இன்று அதிகாலை நகரின் சில பகுதிகளில் ஏற்பட்ட  பனிமூட்டம் காரணமாக  வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கடும் பனிமூட்டத்தால், ரயில் மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஜன.11-ல் துணிவு?

அடுத்த 2 நாள்களுக்கு தில்லியில் மிதமான முதல் கடுமையான பனி நிலவும் என்றும், இந்த வார இறுதியில் பனியின் பாதிப்பு குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.