இந்தியா

தில்லியில் கடும் பனிமூட்டம்: ரயில்கள் தாமதம்

DIN

தில்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, ரயில்கள் தாமதம் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பனிமூட்டம் காரணமாக தில்லிக்கு செல்லும் 21 ரயில்கள் சில மணி நேரம் தாமதமாக வந்ததாக ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தில்லியில் நிலவும் கடும் பனி மற்றும் மோசமான வானிலை காரணமாக திங்கள்கிழமை இரவு 5 விமானங்கள் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டதாக சர்வதேச விமான நிலைய அதிகாரி தெரிவித்தார்.

அதிவிரைவு ரயில், பிரிமியம் ரயில்களும் தாமதமாக இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை நகரின் சில பகுதிகளில் ஏற்பட்ட  பனிமூட்டம் காரணமாக  வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கடும் பனிமூட்டத்தால், ரயில் மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஜன.11-ல் துணிவு?

அடுத்த 2 நாள்களுக்கு தில்லியில் மிதமான முதல் கடுமையான பனி நிலவும் என்றும், இந்த வார இறுதியில் பனியின் பாதிப்பு குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

SCROLL FOR NEXT