இந்தியா

அஞ்சலி சிங்கின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறினார் மணீஷ் சிசோடியா

PTI

புது தில்லி: காரில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டதில் மரணமடைந்த இளம்பெண் அஞ்சலி சிங்கின் வீட்டுக்கு இன்று நேரில் சென்ற தில்லி துணை முதல்வர் மணீண் சிசோடியா, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தலைநகர் புது தில்லியின் கஞ்சாவாளா பகுதியில், ஸ்கூட்டர் மீது கார் மோதி, தவறி விழுந்தபோது, காரின் சக்கரத்தில் கால் சிக்கிக் கொண்டதால் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டதால், 20 வயது இளம்பெண் அஞ்சலி சிங் பலியானார்.

இந்த நிலையில், மணீஷ் சிசோடியா, இன்று அஞ்சலி சிங்கின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மணீஷ் சிசோடியா, இது மிகக் கொடூரமான சம்பவம். 20 வயது இளம்பெண்தான், அவரது குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர். அவருக்கு சகோதர, சகோதரிகள் உள்ளனர். ஒட்டுமொத்த சம்பவமும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT