தில்லி, புறநகர் பகுதிகளில் நிலநடுக்கம்
தில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் வியாழக்கிழமையான இன்று (ஜன. 5) லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
தில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் வியாழக்கிழமையான இன்று (ஜன. 5) லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் அதே நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் ரிக்டர் அளவு 5.9 ஆக பதிவாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் ஃபயாஸாபாத் பகுதிக்கு 79 கிலோ மீட்டர் தொலைவில் இரவு 7.55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக அதே வேளையில் தில்லி மற்றும் புறநகர் பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. ரிக்டர் அளவில் 3.8ஆக பதிவாகியுள்ளது என நிலநடுக்க அதிர்வுகளை கணக்கிடும் தேசிய மையம் குறிப்பிட்டுள்ளது.