இந்தியா

கென்யா நாட்டிலிருந்து வந்த நாமக்கல் இளைஞருக்கு கரோனா!

DIN

நாமக்கல்: கென்யா நாட்டில் இருந்து நாமக்கல் திரும்பிய இளைஞருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் காளப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த 36 வயது இளைஞர் கென்யா நாட்டில் தனியார் துறையில் பணியாற்றி வருகிறார். பொங்கல் பண்டிகையையொட்டி இரு நாள்களுக்கு முன்பு அவர் நாடு திரும்பினார். 

கென்யாவிலிருந்து ஷார்ஜா வழியாக கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கே அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவருடைய சளி மாதிரிகள் சென்னையில் உள்ள கரோனா ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது. அதில் கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டார். மேலும், அவருடைய குடும்பத்தில் உள்ள 6 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெ. பிரபாகரன் உத்தரவின் பேரில், காளப்பநாயக்கன்பட்டி பகுதியில் கரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கூறுகையில், காளப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அவரது குடும்பத்தில் உள்ள 6 பேரின் மாதிரிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.  கரோனாவால் பாதிக்கப்பட்டவர் நலமுடன் உள்ளார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT