இந்தியா

ஆர்பிஐ உடனான ஆலோசனைக்குப் பிறகு பழக்கடையில் ஆனந்த் மஹிந்திரா செய்த செயல்!

DIN

ரிசர்வ் வங்கி உடனான ஆலோசனைக்குப் பிறகு இணைய வழி பணப்பரிவர்த்தனை குறித்து அறிந்துகொண்டதாக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். 

ரிசர்வ் வங்கி உடனான ஆலோசனைக்குப் பிறகு சாலையோரமிருந்த பழக்கடைக்குச் சென்று இணையவழி பணப்பரிவர்த்தனை செய்து பழங்களை வாங்கினார். இது தொடர்பான விடியோவையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

இந்திய தொழில் முனைவோர்களின் ஒருவரான ஆனந்த மஹிந்திரா, சமூக வலைதளங்களில் சுவாரசியமான விடியோக்களை அடிக்கடி பகிர்வது வழக்கம். 

அந்தவகையில், தற்போது சாலையோர பழக்கடையில் இணையவழி பணப்பரிவர்த்தனை மூலம் பழங்கள் வாங்கியுள்ள விடியோவைப் பகிர்ந்துள்ளார். 

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ரிசர்வ் வங்கி உடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.  அதில் இணையவழி பணப் பரிவர்த்தனை குறித்து அறிந்துகொண்டேன். அந்த ஆலோசனைக்குப் பிறகு அருகில் சாலையோரம் பழக்கடை வைத்திருந்த பச்சே லால் சஹானியை சந்தித்தேன். அவரிடம் முதல் முறையாக இணைய பணப் பரிவர்த்தனை செய்து பழங்களை வாங்கினேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT