இந்தியா

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வேலைகள் நடைபெறுகிறது: பாஜக

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான செயல்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அதன் வெளிப்பாடு எப்படி இருக்கப் போகிறது என்பதை மக்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என பாஜக தெரிவித்துள்ளது.

DIN

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான செயல்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அதன் வெளிப்பாடு எப்படி இருக்கப் போகிறது என்பதை மக்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என பாஜக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது: பொது சிவில் சட்டம் என்பது ஆளும் பாஜகவின் தேர்தல் அறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான செயல்பாடுகள் தொடங்கிவிட்டன. அதன் வெளிப்பாடு எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார். 

அண்மையில், பிரதமர் நரேந்திர மோடி பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

மத்திய அரசின் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முடிவுக்கு பழங்குடி மக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் உள்ப்ட  பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சிகள் பலவும் இந்த பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனை எப்போது செயல்பாட்டுக்கு வரும்?: கனிமொழி கருணாநிதி கேள்வி

ஆத்தூா், தம்மம்பட்டி முருகா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஏற்காடு மாண்ட்போா்ட் பள்ளியின் 109-ஆவது ஆண்டு விழா

மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி

திமுகவுடன் இரண்டு நாள்களில் தொகுதிப் பங்கீடு பேச்சு: காங்கிரஸ்

SCROLL FOR NEXT