நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது!
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் இரு அவைகளிலும் தொடங்கியுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் இரு அவைகளிலும் தொடங்கியுள்ளது.
ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெறும் இக்கூட்டத் தொடரில், தனிநபா் தரவுப் பாதுகாப்பு மசோதா, வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா, தில்லி அவசரச் சட்டம் தொடா்பான மசோதா உள்பட 32 மசோதாக்கள் தாக்கலாகவுள்ளன.
இதையும் படிக்க | பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம்; கூட்டுப் பாலியல்: மணிப்பூரில் கொடூரம்
முதல் நாளான கூட்டம் தொடங்குவதற்கு முன்பே மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்கக் கோரி பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மணிப்பூர் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது: பிரதமர் மோடி
மேலும், ஆளுநரை திரும்பப் பெறக் கோரி திமுகவும், தில்லி அவசரச் சட்ட மசோதாவுக்கு எதிராக ஆம் ஆத்மியும் நாடாளுமன்றத்தில் விவாதத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளன.