கோப்புப்படம் 
இந்தியா

சிபிஐ, அமலாக்கத்துறை பெயர்களை பாஜக படை என மாற்றலாம்

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் பெயரை பாஜக படை என மாற்ற வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கினைப்பாளரும்,தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால்  தெரிவித்துள்ளாா்.

DIN

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் பெயரை பாஜக படை என மாற்ற வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கினைப்பாளரும்,தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால்  தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அரவிந்த் கேஜரிவால் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் பெயரை பாஜக படை என மாற்ற வேண்டும். முன்பெல்லாம் இந்த அமைப்புகளுக்கு நல்ல மரியாதை இருந்தது. அவர்கள் சோதனை செய்யும்போதோ  அல்லது கைது செய்யும்போதோ,  தவறு நடந்திருக்கும் என்று தோன்றியது. ஆனால், தற்போது இந்த அமைப்புகள் பாஜகவின் அரசியல் ஆயுதங்களாக மாறிவிட்டன எனத் தெரிவித்தார்.

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் நேற்று நள்ளிரவு வரை அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று அதிகாலை அவரை கைது செய்தனர்.

இந்நிலையில், செந்தில் பாலாஜி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT