இந்தியா

நாட்டில் கரோனா சிகிச்சையில் 1,549 பேர்!

DIN

நாடு முழுவதும்  கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,549 ஆகக் குறைந்துள்ளது. 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.  

அதன்படி, இன்று புதிதாக 47 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்பு 4,49,94,144 உள்ளது. 

இன்று காலை 8மணி அறிக்கையின்படி கரோனா பாதித்து  இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 5,31,905 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 98.81 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில் இதுவரை 1.18 சதவீதம் பேர் கரோனா பாதித்து இறந்துள்ளனர். 4,44,60,690 பேர் கரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.66 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT