இந்தியா

நாகாலாந்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் பாஜக - என்டிபிபி கூட்டணி 

DIN

60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்து பேரவைக்கு நடந்த தேர்தலில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) - பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி, இந்தக் கூட்டணி 36 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம், இந்தக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகியிருக்கிறது.

பாஜக வேட்பாளர் பஷங்மோங்பா 5,644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

நாகாலாந்து மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி 36 இடங்களில் முன்னிலை வகிக்க, நாகா மக்கள் முன்னணி (என்பிஎஃப்) 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சுயேச்சை உள்ளிட்ட இதர கட்சிகள் 22 இடங்களில் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் கட்சி இதுவரை எந்தத் தொகுதியிலும் முன்னிலையில் இல்லை என்று களநிலவரம் தெரிவிக்கிறது.

தேர்தலில் பல முனை போட்டி நிலவிய நிலையில், 16 சுயேச்சைகளும் களத்தில் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT