இந்தியா

திரிபுராவில் மார்ச் 8-ல் பதவியேற்பு விழா: பிரதமர் மோடி பங்கேற்பு!

DIN

திரிபுராவில் மார்ச் 8-ம் தேதி நடைபெறும் பாஜக-ஐபிஎஃப்டி அரசின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்று மூத்த அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார். 

சமீபத்தில் நடந்து முடிந்த திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பாஜக 32 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டி ஒரு இடத்தையும் வென்றுள்ளது. 

பிரதமரின் மாநில பயணம் குறித்து மூத்த அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் எஸ்.கே.சின்ஹா ஆலோசனை நடத்திவருகிறார். 

மார்ச் 8-ம் தேதி புதிய அரசின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் திரிபுரா வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

முதல்வர் மாணிக் சாஹா தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் சத்யதேவ் நரேன் ஆர்யாவிடம் வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தார். 

இதையடுத்து, திரிபுராவின் விவேகானந்தர் மைதானத்தில் புதிய அரசின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் அழைக்கப்படுவார்கள் என்று பாஜக மாநில துணைத் தலைவர் ரெபதி திரிபுரா சனிக்கிழமை தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT