முகப்பு
இந்தியா

மும்பையின் சுரங்க மெட்ரோ ரயில் திட்டம் ஒரு புதிய அத்தியாயம்

மும்பையில் நிறுவ திட்டமிடப்பட்டிருக்கும் சுரங்க மெட்ரோ ரயில் திட்டம், இந்தியாவின் மிக நீண்ட மற்றும் புதிய அத்தியாயத்தின் துவக்கமாக மாறுகிறது. 

இந்தியா

மும்பையின் சுரங்க மெட்ரோ ரயில் திட்டம் ஒரு புதிய அத்தியாயம்

மும்பையில் நிறுவ திட்டமிடப்பட்டிருக்கும் சுரங்க மெட்ரோ ரயில் திட்டம், இந்தியாவின் மிக நீண்ட மற்றும் புதிய அத்தியாயத்தின் துவக்கமாக மாறுகிறது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:57 PM
பகிர்:


மும்பையில் நிறுவ திட்டமிடப்பட்டிருக்கும் சுரங்க மெட்ரோ ரயில் திட்டம், இந்தியாவின் மிக நீண்ட மற்றும் புதிய அத்தியாயத்தின் துவக்கமாக மாறுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் கொலாபா - ஆரே இடையே நடைபெற்று வருகிறது. இந்தியாவிலேயே மிக நீண்ட தொலைவுக்கு சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டு வரும் இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை வரும் அக்டோபர் மாதத்துக்குள் முடித்து, சோதனை ஓட்டத்தை நடத்தும் நோக்கத்தோடு, பொறியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், தொழிலாளர்கள், திட்ட வடிவமைப்பாளர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

பாதுகாப்பு நடைமுறைகள் கவனத்துடன் பின்பற்றப்பட்டு, முதல் கட்டப் பணிகள் இன்னும் ஆறு மாதங்களில் முடிக்கப்பட்டு, டிசம்பரில் ரயில்களை இயக்கிப் பார்க்க திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

மும்பை மெட்ரோ ரயில் கழகத்துக்கு, மும்பையில் நடந்து வரும் மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணியை செய்து முடிப்பது என்பது மிகவும் பெருமைமிகு பணியாகக் கருதப்படுகிறது. இதுதான், மும்பையின் புறநகர்ப் பகுதிகளை இணைக்கும் ஒரே மெட்ரோ ரயில் திட்டமாக இருக்கும்.

பாந்த்ரா குர்லா வளாகம் - ஆரே இடையேயான முதல் கட்டப் பணிகளை டிசம்பர் அல்லது அதையடுத்து மூன்று மாதங்களுக்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த திட்டம், ஆரே காலனியில் தொடங்கி சாஹர் சாலை வழியாக, வித்யாநகரி, பாந்த்ரா குர்லா வளாகம் வரை 12.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு 11 ரயில் நிலையங்களைக் கொண்டிருக்கும். இதில், சர்வதேச விமான நிலையம், உள்நாட்டு விமான நிலையம் என இரண்டு ரயில் நிலையங்கள் அமையவிருக்கின்றன. இந்த வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு 110 ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த பயண நேரம் 25 நிமிடங்கள் ஆகும்.
 

முழு கட்டுரையைப் படிக்க →