திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் ஆர்ஜித சேவைகளுக்கான முன்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பதி கோயிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் சுப்ரபாதம், தேமாலை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கு நாளை(மே.18) காலை 10 மணி முதல் மே 20 ஆம் தேதி வரை தேவாஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதத்துக்கான அங்கபிரதட்சண டிக்கெட்டுகளின் கோட்டா வரும் மே 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
இதையும் படிக்க: சித்தராமையாவுக்கு பாலூற்றிய தொண்டர்கள்!
இதை பக்தா்கள் இலவசமாக தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்து, அங்கபிரதட்சண சேவையில் பங்கு கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.