முகப்பு
இந்தியா

மிசோரம், சத்தீஸ்கர் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது

சத்தீஸ்கரில் முதல்கட்ட தேர்தல், மிசோரம் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:17 AM
பகிர்:

சத்தீஸ்கரில் முதல்கட்ட தேர்தல், மிசோரம் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. 

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பா் 7, 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அதில் முதல்கட்டமாக  20 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதையொட்டி அங்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதேசமயம் வடகிழக்கு மாநிலமான மிசோரமிலும் நவம்பர் 7-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. 

மிசோரத்துக்கு நேரடியாக செல்லாமல் விடியோ மட்டும் வெளியிட்டு பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரமர் மோடியுடன் ஒரே மேடையில் பிரசாரத்தில் பங்கேற்க மாட்டேன் என்று மிசோரம் முதல்வர் ஜோரம் தங்கா தெரிவித்திருந்தார். 

மிசோரம் முதல்வர் ஜோரம் தங்காவின் முடிவால் அங்கு பிரசாரத்திற்கு பிரதமர் மோடி செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

முழு கட்டுரையைப் படிக்க →