இந்தியா

தலைமைத் தகவல் ஆணையராக ஹீராலால் சமாரியா பதவியேற்பு!

இந்தியாவின் 12-வது தலைமைத் தகவல் ஆணையராகப் பதவியேற்றார் ராஜஸ்தானைச் சேர்ந்த ஹீராலால் சமாரியா.

DIN

இந்தியாவின் தலைமைத் தகவல் ஆணையராக ஹீராலால் சமாரியா இன்று (நவம்பர் 6) பதவியேற்றுக் கொண்டார். 

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹீராலால் சமாரியாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

ராஜஸ்தானைச் சேர்ந்த ஹீராலால் சமாரியா மத்திய உரம் மற்றும் வேதிப்பொருட்கள் துறையின் இணைச் செயலாளராகவும், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மத்திய தகவல் ஆணையத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ள முதல் தலித் நபர் என்ற பெருமையை ஹீராலால் சமாரியா பெற்றுள்ளார். 

இதற்கு முன்பு இப்பதவியில் இருந்த ஒய்.கே.சின்ஹாவின் பதவிக்காலம் அக்டோபர் 3-ஆம் தேதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஒரு மாத காலமாக இப்பதவி காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT