உ.பியில் அம்பேத்கர் சிலை உடைப்பு, வழக்கு பதிவு செய்யப்பட்டது!
உத்தர பிரதேச மாநிலத்தில் அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டுள்ளது எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாஉ.பியில் அம்பேத்கர் சிலை உடைப்பு, வழக்கு பதிவு செய்யப்பட்டது!
உத்தர பிரதேச மாநிலத்தில் அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டுள்ளது எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் கவுஸ்ஹம்பி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் டாக்டர். அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டுள்ளது எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சித்தாப்பூர் கிராம மக்கள் அம்பேத்கர் சிலையின் கை விரல்கள் மற்றும் கையில் இருக்கும் புத்தகம் ஆகிய பகுதிகள் சேதமடைந்திருப்பதைக் கவனித்தனர். உடனே காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் தெரிந்த உடனேயே சிலையை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அப்பகுதியின் வட்ட அதிகாரி யோகேந்திர கிருஷ்ண நாராயண் தெரிவித்துள்ளார். வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளைத் தேடிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ‘இதயம் மிகவும் கனமாக உள்ளது’: அரவிந்த் கேஜரிவால்
மேலும் சனிக்கிழமை இரவு இந்தச் சேதம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், காவல்துறையினர் இது குறித்து ஆய்வு நடத்திவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.