இந்தியா

தெலங்கானாவில் 13 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர்!

தெலங்கானாவில் ரூ.13,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 1) தொடங்கி வைத்தார்.

DIN

தெலங்கானாவில் ரூ.13,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 1) தொடங்கி வைத்தார்.

தெலங்கானாவில் நாக்பூர்-விஜயவாடா பொருளாதார வழித்தடம் உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் இன்று தொடங்கி வைத்தார். மாநிலத்தில் ரூ.6400  கோடி மதிப்பில் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ரூ.900 கோடி மதிப்பில் மத்திய பழங்குடியினர் பல்கலைக் கழகம் தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் அமையவுள்ளது எனவும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் தெலங்கானாவில் தேசிய மஞ்சள் ஆணையம் மத்திய அரசினால் அமைக்கப்படும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஹைதராபாத்-விசாகப்பட்டினம் இடையே ரூ.2,460 கோடி மதிப்பில் பொருளாதார வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் பாரத்மாலா பாரியோஜனா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. புதிய ரயில் வழித்தடங்களும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

தெலங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT