மேற்கு வங்க எல்லையில் தங்கத்தை கடத்தியதாக வங்கதேசத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தின் பெட்ராபோலில் உள்ள சர்வதேச எல்லையான இந்தியா-வங்கதேச எல்லை வழியாக ரூ.1. 86 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தியதாக ஒரு பெண் உட்பட 4 வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதாக பிஎஸ்எஃப் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெலால் ஹொசைன் (40), முகமது கபீர் (48), அசம் கான் (46), ஜூபிதா கானும் (33) ஆகிய நான்கு பேரும் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டப்பூர்வமாக நுழையும்போது, அவர்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
உடனே அவர்களிடமிருந்து 3.19 கிலோ எடையுள்ள 23 தங்க பிஸ்கட்டுகள் மற்றும் 4 தங்க வளையல்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து கைதான 4 பேரும் உள்ளூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.