இந்தியா

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதார பாதிப்பு: முதல்வர் பேச்சு

DIN

தெலங்கானா மாநில முதலமைச்சரும், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தெலங்கானா பொருளாதாரம் பாதிப்பு அடைந்ததாக தெரிவித்துள்ளார். 

தெலங்கானா மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 30-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு நேற்று (அக்டோபர் 20) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய சந்திரசேகர ராவ், “தேர்தலில் 95 முதல் 105 இடங்கள் வெற்றிபெறுவோம், காஜ்வெல் தொகுதி மக்கள் தன் மீது பேரன்பு வைத்துள்ளனர்” என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், “பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் கரோனா நோய்த் தொற்று ஆகியவை காரணமாக தெலங்கானாவின் பொருளாதார வளர்ச்சியில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் இளம் மாநிலமான தெலங்கானா கடுமையான உழைப்பின் மூலம் பெரும் வளர்ச்சியை எட்டும்.

மேலும், தற்போது எட்டியுள்ள வளர்ச்சியால் நாம் திருப்தி அடைந்து விடக்கூடாது. வளர்ச்சியை நோக்கி செல்வது என்பது தொடர் செயல்முறையாகும் என்று தெரிவித்தார். 

2014-ஆம் ஆண்டு முதல் சந்திரசேகர ராவ் தெலங்கானாவின் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார். அவரது பி.ஆர்.எஸ். கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோத்துப்பாறை அணை நிரம்பியது

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ முகாம்

திண்டுக்கல் அருகே 2 போலி மருத்துவா்கள் கைது

குரூப் 4 தோ்வு: திண்டுக்கல்லில் 59,615 போ் எழுதுகின்றனா்

ஆத்தூா் தொகுதியில் சாலைகள் அளவிடும் பணி

SCROLL FOR NEXT