நாளை மகாராஷ்டிரம், கோவாவுக்குச் செல்கிறார் பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி நாளை மகாராஷ்டிரம், கோவாவுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நாளை மகாராஷ்டிரம், கோவாவுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவலில்,
அக்.26-ம் தேதி மகாராஷ்டிரம் செல்லும் மோடி புகழ்பெற்ற சீரடி சாய்பாபா கோயிலில் வழிபாடு மேற்கொள்கிறார். சீரடியில் புதிய தரிசன வரிசை வளாகத்தைத் திறந்துவைக்கிறார். பின்னர் சுமார் ரூ.7,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
கோவா மாநிலத்தில் 37வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கிவைத்து, விளையாட்டு வீரர்களிடம் உரையாற்ற உள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளது.