அறுவை சிகிச்சையில் அகற்றப்பட்ட மீன் மற்றும் எலுமிச்சை.  புகைப்படம்: நன்றி எக்ஸ் தளம்
இந்தியா

ஆசனவாய்க்குள் உயிருடன் மீனை விட்ட இந்தியர்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்

வியட்நாமில் 31 வயது இந்தியர் ஒருவர் ஆசனவாய் வழியாக உயிருள்ள விலாங்கு மீனை விட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

வியட்நாமில் 31 வயது இந்தியர் ஒருவர் ஆசனவாய் வழியாக உயிருள்ள விலாங்கு மீனை விட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை 27ஆம் தேதி 31 வயது இந்தியர் ஒருவர் கடும் வயிற்று வலி காரணமாக அங்குள்ள மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். உடனே அவருக்கு எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. மருத்துவப் பரிசோதனையில் விலாங்கு மீன் எலும்புக்கூடு தெரியவதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த மீன் நோயாளியின் மலக்குடல் மற்றும் பெருங்குடலை கடித்து அதன் வழியாக வயிற்று குழிக்குள் நுழைந்திருந்தது. உடனே அந்த மீனை ஆசனவாய் வழியாக அகற்ற மருத்துவர்கள் முயன்றனர். ஆனால் அது முடியவில்லை. காரணம், அந்த நோயாளி விலாங்கு மீனுக்கு பிறகு எலும்பிச்சை பழம் ஒன்றையும் செருக்கியிருக்கிறார்.

உடனே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் உயிருடன் இருந்த விலாங்கு மீன் மற்றும் எலுமிச்சை பழத்தையும் அகற்றியுள்ளனர். நோயாளியின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட அந்த மீன் 63.5 செ.மீ. நீளம் கொண்டதாக இருந்துள்ளது. இந்நிகழ்வு மருத்துவர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4.2.1976: கருணாநிதி, சில மாஜி தி.மு.க. மந்திரிகள் மீது விசாரணை

ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து: இருவா் கைது

இந்தியாவுக்கு வரி குறைப்பு: பிரதமா் மோடிக்கு ஜவுளித் தொழில் அமைப்புகள் நன்றி

கர்நாடக பேரவையில் விபி ஜி ராம் ஜி சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம்

கொலை வழக்கு குற்றவாளி உள்பட 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

SCROLL FOR NEXT