மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது மூன்று நாள் அரசு முறைப் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வருகிறார்.
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், அன்வார் இப்ராஹிம் இன்று முதல் 21-ம் தேதி வரை இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையடுத்து அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் செவ்வாய்கிழமை முறைப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்த உள்ளார்.
அதன்பிறகு பிரதமர் மோடியுடன் இருத்தரப்பு உறவு குறித்து அவர் விவாதிக்க உள்ளார். தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் அன்வார் இப்ராஹிம் சந்தித்து கலந்துரையாடுகிறார்.
மேலும் இந்த பயணத்தின் போது வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் மலேசிய பிரதமர் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.