முகப்பு
இந்தியா

நான் சிறையில் அடைக்கப்பட்டாலும் அரசின் வளர்ச்சிப் பணிகள் நிற்காது: அரவிந்த் கேஜரிவால் 

தான் சிறைக்கு அனுப்பப்பட்டாலும் அரசின் வளர்ச்சிப் பணிகள் நிற்காது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.  

Updated On : 9 பிப்ரவரி, 2024 at 1:41 PM
அரவிந்த் கேஜரிவால் | கோப்பு
பகிர்:

தான் சிறைக்கு அனுப்பப்பட்டாலும் அரசின் வளர்ச்சிப் பணிகள் நிற்காது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.  

கிராரியில் இரண்டு பள்ளி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டிய கேஜரிவால் பேசியதாவது, மணீஷ் சிசோடியா பள்ளிகளும், சத்யேந்தர் ஜெயின் மொஹல்லா கிளினிக்குகளை கட்டியதால்தான் இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர். 

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற அனைத்து மத்திய அமைப்புகளும் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

ஆனால், நீங்கள் என்னை சிறையில் அடைத்தாலும், தில்லி மக்களுக்கு பள்ளிகள் கட்டுவது, மொஹல்லா கிளினிக்குகள் மூலம் இலவச சிகிச்சை அளிப்பது ஆகிய பணிகள் நிற்காது. 

நாங்கள் தங்கள் கட்சியில் சேர வேண்டும் என்று பாஜக விரும்புகிறது, ஆனால் நாங்கள் தலைவணங்க மாட்டோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

முழு கட்டுரையைப் படிக்க →