பிப்.29ல் நேரில் ஆஜராக கேஜரிவாலுக்கு சம்மன்!
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வரும் 29-ம் தேதி நேரில் ஆஜராக தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வரும் 29-ம் தேதி நேரில் ஆஜராக தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
பிஜெபி ஐடி செல் பார்ட்-2(BJP IT CELL PART-2) எனும் தலைப்பிலான யூடியூப்பர் துருவ் ரவி என்பவர் வெளியிட்ட லிங்கை கேஜரிவால் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்தது குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கில் ஆஜராக அனுப்பிய சம்மனுக்கு எதிராக கேஜரிவால் தொடர்ந்த வழக்கை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பிப்ரவரி 29-ம் தேதி நேரில் ஆஜராக கேஜரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.