ஆப்பிள்
ஆப்பிள் 
இந்தியா

ஆப்பிள் வளர்ச்சிக்கு உரமிடும் இந்தியா!

DIN

அதிநவீன மின்ணனு பொருள்கள் தயாரிப்பில் இந்தியாவின் வலுவான முன்னேற்றம், ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த பத்தாண்டு கால வளர்ச்சிக்கு உரமிடும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய், கடந்த ஆண்டு மட்டும் 42 சதவிகித அளவுக்கு உயர்ந்து 870 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் வருவாய் ஈட்டியதாக வெளிநாட்டு பங்கு பரிவர்த்தனை நிறுவனம் மார்கன் ஸ்டேன்லி தெரிவித்தது.

2023-ல் ஐபோன்கள் ஏற்றுமதி 39 சதவிகிதம் அதிகரித்து 92 லட்சம் யூனிட்கள் ஏற்றுமதியாகின.

தொழில் கொள்கை சாதகமாகவிருப்பதன் பயனாளியாக ஆப்பிள் உள்ளதாகவும் ஏற்றுமதி 40 சதவிகிதம் உயர்ந்ததாகவும் கடந்த ஆண்டுகளில் சீனா ஆப்பிளின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளித்தது போல இந்தியாவும் உதவும் என தொழில்துறை ஆராய்ச்சி வல்லுநர் பிரபு ராம் ஐஏஎன்எஸ்க்குத் தெரிவித்துள்ளார்.

2022-ல் இந்திய சந்தையில் ஆப்பிளின் பங்கு 28 சதவிகிதமாக அதிகரித்தது. இது முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது அதிகமாகும். இந்தியர்களின் பிரீமியம் மாடல் போன்களின் மீதான விருப்பம் அதிகரிப்பதும் இதற்கு ஒரு காரணம்.

இந்தியாவில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ஐபோன்கள் முழுமையாக்கம் (அசெம்பிள்) செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

வாலாஜாப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்து: 18 தொழிலாளர்கள் படுகாயம்

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

SCROLL FOR NEXT