முகப்பு
இந்தியா

ஆப்பிள் வளர்ச்சிக்கு உரமிடும் இந்தியா!

இந்தியாவின் மின்னனு முன்னேற்றம்: ஆப்பிளின் வளர்ச்சிக்கு புதிய ஊக்கம்!

Updated On : 23 பிப்ரவரி 2024, 8:23 pm IST
ஆப்பிள்
பகிர்:

அதிநவீன மின்ணனு பொருள்கள் தயாரிப்பில் இந்தியாவின் வலுவான முன்னேற்றம், ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த பத்தாண்டு கால வளர்ச்சிக்கு உரமிடும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய், கடந்த ஆண்டு மட்டும் 42 சதவிகித அளவுக்கு உயர்ந்து 870 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் வருவாய் ஈட்டியதாக வெளிநாட்டு பங்கு பரிவர்த்தனை நிறுவனம் மார்கன் ஸ்டேன்லி தெரிவித்தது.

2023-ல் ஐபோன்கள் ஏற்றுமதி 39 சதவிகிதம் அதிகரித்து 92 லட்சம் யூனிட்கள் ஏற்றுமதியாகின.

Advertisement

Advertisement

தொழில் கொள்கை சாதகமாகவிருப்பதன் பயனாளியாக ஆப்பிள் உள்ளதாகவும் ஏற்றுமதி 40 சதவிகிதம் உயர்ந்ததாகவும் கடந்த ஆண்டுகளில் சீனா ஆப்பிளின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளித்தது போல இந்தியாவும் உதவும் என தொழில்துறை ஆராய்ச்சி வல்லுநர் பிரபு ராம் ஐஏஎன்எஸ்க்குத் தெரிவித்துள்ளார்.

2022-ல் இந்திய சந்தையில் ஆப்பிளின் பங்கு 28 சதவிகிதமாக அதிகரித்தது. இது முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது அதிகமாகும். இந்தியர்களின் பிரீமியம் மாடல் போன்களின் மீதான விருப்பம் அதிகரிப்பதும் இதற்கு ஒரு காரணம்.

இந்தியாவில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ஐபோன்கள் முழுமையாக்கம் (அசெம்பிள்) செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments