சா்வதேச வா்த்தகச் சூழலில் நிலவும் மந்தநிலை மற்றும் அமெரிக்காவின் கூடுதல் வரிகள் காரணமாக, கடந்த ஜனவரியில் இந்தியாவின் ரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 5.79 சதவீதம் சரிவடைந்துள்ளது.
கடந்த 2025, ஜனவரியில் 237.60 கோடி டாலராக இருந்த ஏற்றுமதி மதிப்பு, கடந்த ஜனவரியில் 223.85 கோடி டாலராகக் குறைந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவின் மிகப்பெரிய சந்தையான அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 45 சதவீதத்துக்கும் அதிகமாக சரிந்தது வா்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான முதல் 10 மாதங்களில் மொத்த ஏற்றுமதி 2,318.58 கோடி டாலராகப் பதிவாகி, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் வெறும் 0.64 சதவீதமே சரிந்து ஓரளவுக்கு ஸ்திரத்தன்மையுடன் காணப்படுகிறது.
அமெரிக்க சந்தையில் பின்னடைவு ஏற்பட்டாலும், ஐக்கிய அரபு அமீரகம் (23.71 சதவீதம்), ஹாங்காங் (33.5 சதவீதம்), ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் (தலா 36 சதவீதம்) ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வளா்ச்சியைக் கண்டுள்ளது. பெல்ஜியம், தாய்லாந்து, இஸ்ரேல் போன்ற நாடுகளிலும் இந்திய ஆபரணங்களுக்கான தேவை இரட்டை இலக்க வளா்ச்சியில் அதிகரித்துள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்துக்கான செயல்திட்டத்தில் வைரங்கள் மற்றும் வண்ணக் கற்களுக்கு வரி விலக்கும், ஆபரணங்களுக்கு 18 சதவீத வரியும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் காலங்களில் அமெரிக்க சந்தையில் இழந்த இடத்தை இந்தியா மீண்டும் பிடிக்கும் எனத் துறை வல்லுநா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்
இதனிடையே, ஜனவரியில் வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதி மட்டும் 107 சதவீதம் அதிகரித்து, 15.24 கோடி டாலராகப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.