இந்தியா

லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.0 ஆகப் பதிவு

DIN

லடாக்: ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.0 அலகுகளாகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 11.48 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

லடாக் பகுதியை மையமாகக் கொண்டு பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வெளிப்பகுதியில் குவிந்தனர். நிலநடுக்கத்தின் போது வீடுகளில் இருந்த பொருள்கள் லேசாக அதிர்வதைக் காணமுடிந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

முன்னதாக, திங்கள்கிழமை காலை 6.36 மணியளவில் ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலைக்குள் சிறை! ஜோவிதா லிவிங்ஸ்டன்..

இருவர் அரைசதம்: லக்னௌ அணிக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

சுந்தரி.. கேப்ரெல்லா!

தீராக் காதல்! ஜான்வி கபூர்..

கடைசி டி20: பாகிஸ்தானுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!

SCROLL FOR NEXT