முகப்பு
இந்தியா

யானை பலி... சேதமடைந்த ரயில் இன்ஜின்

ரயில் மீது யானைகள் மோதி பலியாகிற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துவருகின்றன.

Updated On : 7 ஜனவரி, 2024 at 12:11 PM
மாதிரி படம்
பகிர்:

அஸ்ஸாம் மாநிலம் ஜோர்கட் பகுதியில் ரயில் மோதி யானை பலியாகியுள்ளது. 

கிப்பான் வனஉயிரின காப்பகத்தில் இந்தச் சம்பவம் சனிக்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது. யானைகள் கூட்டமாக ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயிலில் மோதி ஒரு யானை பலியாகியுள்ளது.

”யானை மீது ரயில் இன்ஜின் மோதியது. யானையைத் தாக்கியதால் இன்ஜினில் சில இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன” என அதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertisement

யானை மீது மோதிய ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. யானையின் உடல் காலையில் அப்புறப்படுத்தப்பட்ட பிறகே விவேக் எக்ஸ்பிரஸ் அங்கிருந்து சென்றுள்ளது.

வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்த பிறகு உடற்கூராய்வு செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.