இந்தியா

யானை பலி... சேதமடைந்த ரயில் இன்ஜின்

DIN

அஸ்ஸாம் மாநிலம் ஜோர்கட் பகுதியில் ரயில் மோதி யானை பலியாகியுள்ளது. 

கிப்பான் வனஉயிரின காப்பகத்தில் இந்தச் சம்பவம் சனிக்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது. யானைகள் கூட்டமாக ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயிலில் மோதி ஒரு யானை பலியாகியுள்ளது.

”யானை மீது ரயில் இன்ஜின் மோதியது. யானையைத் தாக்கியதால் இன்ஜினில் சில இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன” என அதிகாரி தெரிவித்துள்ளார்.

யானை மீது மோதிய ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. யானையின் உடல் காலையில் அப்புறப்படுத்தப்பட்ட பிறகே விவேக் எக்ஸ்பிரஸ் அங்கிருந்து சென்றுள்ளது.

வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்த பிறகு உடற்கூராய்வு செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமரிடம் வேட்பு மனு பெற்ற தேர்தல் அதிகாரி தமிழர்

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் புறநகா் ரயில்கள் ரத்து

வேதங்கள் கற்பிக்கும் சமூக நீதி

அரசுப் பள்ளிகளின் சாதனை!

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT